(ந.தனுஜா)
தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, உரிய சட்டதிட்டங்களுக்கு அமைவாகவுமே இடம்பெறுவதை உறுதிசெய்யும் வகையில் இலங்கை உள்ளிட்ட சார்க் அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கி, ஒரு வழிகாட்டியை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத்தடைக் குழு தயாரித்து வருகிறது.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சுதந்திரம், நியாயத்துவம் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த அறிவு என்பன முறையானதொரு நீதித்துறைக்கு, குறிப்பாக தீவிரவாதம் சார்ந்த வழக்குகளில் மிகவும் அவசியமானவையாகும். எனினும் பல நாடுகள் இவ்விடயத்தில் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
இச்சவால்களுக்குத் தீர்வினை வழங்கும் விதமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத் தடைக் குழு சார்க் நாடுகளின் பணியாற்றும் நீதிபதிகளின் பங்களிப்புடன், 'நீதிபதிகளிக்கான தெற்காசியப் பிராந்திய வழிகாட்டிகளை' தயாரித்திருக்கிறது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஜோன் ரொஹ்டே, தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, உரிய சட்டதிட்டங்களுக்கு அமைவாகவுமே இடம்பெற வேண்டும். இக்காரணங்களுக்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினால் வழிகாட்டிகள் தயாரிக்கப்படும் திட்டத்தை ஆதரிக்கிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM