கொரோனா நோய்தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்களின் வாக்குரிமையினை ஐனநாயக மரபு மீறலை கொண்டு செயற்படுத்துவது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளமுடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழவிடுதலை இயகக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்டபொறுப்பாளர் கிறிஸ்டி குகராஜாவின் 21 ஆவது நினைவுதினம் வவுனியாவில் அமைந்துள்ள அவரது நினைவு தூபியடியில் இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுகருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நாம் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதனை சந்திப்பதற்கு தயாராக இருக்கின்றோம். மக்களுடைய ஐனநாயக முறை பயன்படுத்தப்படவேண்டும். மக்கள் தற்போது அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கொரோனா தொற்று நோய் அதிகரித்துவரும் நிலையில் மக்களின் வாக்குரிமையினை ஐனநாயக மரபு மீறலை கொண்டு செயற்படுத்துவது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளமுடியாது.
எனவே சூழலுக்கு ஏற்றவகையில் தேர்தலை நடாத்தவேண்டும் என்பதை நான் இங்கு கூறிக்கொள்ளவிரும்புகின்றேன். மக்கள் கூட்டமைப்பை நிச்சயம் ஆதரிப்பார்கள். அவர்களிற்கு நம்பிக்கை தரக்கூடிய நிலமையை நாம் ஏற்படுத்த வேண்டும்.
எங்களுடைய மக்களின் விடுதலை தான் எமது பிரதான நோக்கம். அதற்காகவே துப்பாக்கி ஏந்தினோம்.
அது புனிதமானதென்பதை அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற வகையில் சுமந்திரன் தொடர்பாக எதிர்மாறான கருத்துக்களை நாம் இதுவரையில் கூறவில்லை.
எனினும் முக்கிய பதவியில் இருந்துகொண்டு விடுதலை போராட்டத்தை ஏற்கவில்லை என்று சொல்வது அவரது தனிப்பட்டகருத்து என்பதை ஏற்கமுடியாது. ஆயுதப்போராட்ட விடயத்தில் தமிழ் கூட்டமைப்பின் கருத்துக்கள் அத்தனையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
குறித்தவிடயம் தொடர்பாக சம்பந்தன் ஐயாவை சந்தித்து உரையாட இருக்கின்றோம்.
அத்துடன் அவர் தெரிவித்த கருத்துக்கள் பல ஊடகங்களில் சிங்களமொழி பெயர்ப்பு வந்திருக்கின்றது. முன்னாள் வடமாகாண அவைதலைவர் சிவஞானம் அந்தவிடயம் தொடர்பாக சரியான விளக்கம் ஒன்றை அழித்துள்ளார். அதிலே சொல்லபட்ட விடயங்கள் அத்தனையும் உண்மை. சிங்களம் தெரியாது என்பதற்காக கருத்துக்கைளை மாறிசொல்ல வேண்டிய நிலை எமக்கில்லை. அப்படி சொல்வது எங்களை மலினப்படுத்துவது போல தெரிகின்றது. என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM