கிளிநொச்சி முழங்காவில் 651 ஆவது படைப்பிரிவின் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை, வாழைத்தோட்டம், மீதொட்டமுல்ல, வெல்லம்பிட்டிய, கொட்டாஞ்சேனை போன்ற பகுதியைச் சேர்ந்த 60 பேர் இன்று (15.05.2020) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
651 ஆவது இராணுவ நிலையத்தின் இராணுவ அதிகாரி தலைமையில் நடைபெற்றது.
குறித்த 60 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நிறைவில் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்பு மருத்துவ சான்றிதழ்கள் வழங்கி வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 60 பேரும் நான்கு இராணுவ பேரூந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். குறித்த 60 பேரில் 22 ஆண்களும் 38 பெண்களும் அடங்குகின்றனர்.
இதன்போது சிறுவன் ஒருவன் தனிமைப்படுத்தல் முடித்து வீடு திரும்பும் வேளையில் தனிமைப்படுத்தல் முகாமில் பணியாற்றிய படைவீரர்களை விட்டு விலக முடியாமல் கதறி அழுததை அங்கிருக்கும் படைவீரர்கள் படை அதிகாரிகள் தனிமைப் படுத்துதலுக்கு வந்திருந்த நபர்கள் அனைவரையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்தது எம்மால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
தனிமைப்படுத்தல் நிறைவு செய்த நபர் ஒருவர் படையணியின் இராணுவ அதிகாரியின் உருவத்தை வரைந்து அதிகாரி ஒருவருவருக்கு நினைவாக வழங்குகி வைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM