(செ.தேன்மொழி)
கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக இரு மாதகாலமாக மூடப்பட்டிருந்த நடைபாதை ஒழுங்கைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
உடற்பயிற்சிகள் மற்றும் நடைப்பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கா ஒதுக்கப்பட்டுள்ள நடைபாதை ஒழுங்கைகள் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஏற்படும் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு மூடப்பட்டிருந்தன.
இதேவேளை நாடுபூராகவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டமும் அமுல் படுத்தப்பட்டிருந்தது. வைரஸ் பரவலை தடுப்பதற்காக நபர்களுக்கிடையிலான இடைவெளியை பேணும் நோக்கிலே அரசாங்கத்தினால்இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது ஊரடங்குச் சட்டமும் தளர்த்தப்பட்டு வருகின்ற நிலையில், நாட்டின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பி வருகின்ற நிலையில், நடைபாதை ஒழுங்கைகள் இன்று வெள்ளிக்கிழமை காலை மீண்டும் திறந்துவைக்கப்பட்டன.
அதற்கமைய மேல்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கமைய, பொலிஸ் விளையாட்டு பிரிவைச் சேர்ந்த பொலிஸார் சிலர், கொழும்பு-07 , டொரிங்டன் பகுதியிலுள்ள நடைபாதை ஒழுங்கையை திறந்து வைத்தனர்.
வைரஸ் பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், இந்த நடைபாதை ஒழுங்கைகளை பயன்படுத்துபவர்களும், உடற்பயிற்சிகளில் ஈடுப்படுபவர்களும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி உடற்பயிற்சிகளில் ஈடுப்படுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM