குமுதினிப்படகு படுகொலை நினைவுகூர்வதற்கு மதகுருவுக்கு அச்சுறுத்தல் கெடுபிடி மத்தியில் ஏற்பாட்டுக்குழுவின் சிலருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
நெடுந்தீவு கடற்பரப்பில் 1985 ஆம் ஆண்டு இதே நாள் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவேந்தல் நிகழ்வுக்கு சென்றால் கைதுசெய்யப்படுவீர்கள் என்று அந்தப் பகுதி பங்குத் தந்தைக்கு பொலிஸாரால் மிரட்டல் விடுக்கப்பட்டதால் நிகழ்விற்கு செல்லாது பங்குத்தந்தை திரும்பிச் சென்றுள்ளார்.
நெடுந்தீவு துறைமுகப்பகுதியில் குறித்த படுகொலை நினைவாக நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் அந்தத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து சுடர் ஏற்றி மக்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கமாகும்.
இந்த ஆண்டும் வணக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகள் ஏற்பாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் அந்தப் பகுதி மதகுருவை தொடர்புகொண்டு நிகழ்வில் பங்கேற்க வேண்டாம் என்றும் மீறி பங்கேற்றால் கைதுசெய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டியதாக கூறப்படுகின்றது.
இதேவேளை ஏற்பாட்டுக்குழுவின் சிலருக்கு மாத்திரமே குறித்த நிகழ்வில் பங்குகொண்டு உயிரிழந்தவர்களுக்காக வணக்கம் செலுத்தியதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM