கியூபாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இணைப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரியொருவர் வியாழக்கிழமை ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் கூறியுள்ளார்.
இது வொஷிங்டனுக்கும் ஹவானாவுக்கும் இடையிலான பெருகிய பதற்றமான உறவுகளுக்கு மற்றொரு பெரிய அடியாகும்.
சோசலிச வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாலும், கொலம்பியாவின் தேசிய விடுதலை இராணுவத்தின் (ELN ) கிளர்ச்சிக் குழுவின் தலைவர்களுக்கு அளிக்கும் அடைக்கலம் காரணமாகவும் கியூபாவை அமெரிக்க பயங்கரவாத தடுப்புப் பட்டியலில் மீண்டும் வைக்க வேண்டும் என்று ஒரு நிலைப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
தனது பெயர் விபரங்களை வெளிப்படுத்தாது ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் பேசிய அந்த அதிகாரி, இந்த ஆண்டின் இறுதிக்குள் கியூபா குறித்த பட்டியலில் உள்வாங்கப்படும் என்றும் கூறினார்.
2015 ஆம் ஆண்டில் கியூபாவை பயங்கரவாத பட்டியலில் இருந்து முறையாக அகற்ற அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா எடுத்த முடிவு, அந்த ஆண்டு இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கியமான படியாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM