யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என யாரும் பீதியடைய தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வெலிக்கந்தை சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் வீடு திரும்பிய ஐவருக்கு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நேர்மறை (பொசிட்டீவ்) என அறிக்கை வந்துள்ளது. எனினும் அது இறந்த வைரஸாக இருக்கலாம் என்றே நம்புகிறோம்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் அறிவித்தல் வழங்கியுள்ளோம். அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய ஐவரயையும் அவர்களது குடும்பத்துடன் அவர்களது வீடுகளில் எதிர்வரும் 14 நாள்களுக்கு தனிமை படுத்தியுள்ளோம்.
ஐந்து பேருக்கும் 14 நாள்களின் பின்னர் மீண்டும் பி.சிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் . எனவே இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மக்கள் அச்சமடையத் தேவையில்லை.
ஏனெனில் இவ்வாறான சம்பவங்கள் உலக நாடுகளில் கொவிட் -19 தொற்றுக்குள்ளானவர்களிற்கும் தொற்றிலிருந்து மீண்ட பின்னரும் பரிசோதனையில் தொற்று என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே நேற்றையதினம் தொற்று இனங்காணப்பட்டவர்களை தனிமைப்படுத்தி உள்ளோம். இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை,
ஆனாலும் சுகாதார விதிகளை பின்பற்றி ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி தம்மை நோயில் இருந்து காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரோனா தொற்று நோயினை இல்லாதொழிக்க நீண்டகாலம் செல்லும்.
எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமது வாழ்க்கையை கொண்டு செல்வதன் மூலமே கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM