மே மாதத்தில் பணவீக்கமானது 5.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன் படி, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில்2016 ஏப்ரல் மாதத்தில் பணவீக்கமானது 4.3 சதவீதத்திலிருந்து 2016 மே மாதத்தில் 5.3 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது.
இவ் அதிகரிப்பிற்கு உணவு, வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருள் துணைத்துறை தவிர்ந்த உணவல்லா அனைத்து வகைகளும் பிரதான பங்களிப்பை வழங்கின.
அத்துடன் ஆண்டு சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் ஏப்ரல் மாதத்தில் 2.6 சதவீதத்திலிருந்து 2016 மே மாதத்தில் 2.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.
அதே போல் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றமானது 1.9 சதவீதத்தினால் அதிகரித்தது.
இம்மாதாந்த அதிகரிப்பிற்கு, உணவல்லா வகையிலுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாக அமைந்தது. ஆடைகள் மற்றும் காலணிகள், வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு, எரிபொருட்கள் தளபாடங்கள், வீட்டுச் சாதனங்கள்,வழமையான வீட்டு பேணல்கள் நலம் தொடர்பூட்டல் பொழுதுபோக்கு கலாச்சாரம், உணவகங்கள் சுற்றுலா விடுதிகள்,பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகளின் துணை வகைகளின் விலைகள் இக் காலப்பகுதியில் அதிகரித்தன.
அண்மையில் வரிகளில் செய்யப்பட்ட மாற்றங்களின்நேரடித்தாக்கமும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த அதிகரிப்பில் அவதானிக்கப்பட்டது.
மே மாதத்தில் உணவு மற்றும் வெறியமல்லா குடிபான வகைகளின் விலைகளும் அதிகரித்ததோடு இக்காலப்பகுதியில் காய்கறிகள், அரிசி, எலுமிச்சம்பழம், உருளைக்கிழங்கு, பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீனி மற்றும் கருவாடு என்பனவற்றின் விலைகள் அதிகரித்தன.
அதேவேளை, இம் மாதக் காலப்பகுதியில் வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை துணை வகையின் விலைகள் வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், போக்குவரத்து மற்றும் கல்வி துணை வகைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றிக்காணப்பட்டன. அதேவேளை, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2016 ஏப்ரல் மாதத்தில் 5.9 சதவீதத்திலிருந்து 2016 மே மாதத்தில் 7.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டுச்சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2016 ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதத்திலிருந்து 2016 மே மாதத்தில் 5.0 சதவீதத்திற்கு அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM