உலக நாடுகள் நிதியுதவி தருவார்கள் என்ற நம்பிக்கையில் எமது பணத்தை செலவு செய்கின்றோம் - அரசாங்கம் 

Published By: Digital Desk 3

15 May, 2020 | 12:42 PM
image

 (ஆர்.யசி)

இலங்கைக்கு நிவாரணமாகவும், கடனாகவும் வழங்குவதாக சர்வதேச நாடுகள் கூறிய  தொகையில் ஒரு டொலரேனும் எமக்கு கிடைக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறுவதாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவித்தார் அமைச்சர் ரமேஷ் பத்திரன, அரசாங்கத்தின் தேவைக்காக 3000 வாகனங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் கூறினார்.

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதிகளில் இலங்கைக்கு கிடைத்த நிதித்தொகை எவ்வளவு என அமைச்சரவையில் இன்று கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைக் கூறினார், இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக உலக நாடுகள் எமக்கு வழங்கிய தொகையில் இதுவரையில் ஒரு டொலரேனும் எமக்குக் கிடைக்கவில்லை. அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரண்டு மாதங்களில் 80 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதார நிலைமைகளை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச ஊழியர்களின் கொடுப்பனவில் அறவிட அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக பொய்யாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. யார்  விரும்புகின்றார்களோ அவர்கள் சுயமாக உதவி செய்ய முடியும்.

அதேபோல் அரசாங்கதின் தேவைக்காக மூவாயிரம் வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனினும் அவ்வாறான எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்போது இருக்கும் வளங்களை பயன்படுத்தியே அரசாங்கம் இயங்க வேண்டும் என்ற கொள்கையில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். இப்போதுள்ள நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எந்தவித வாகனங்களும் வழங்கப்படாது என நாம் நம்புகின்றோம் என்றார்.

இது குறித்து அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறுகையில்,

உலக வங்கியின் மூலமாக 126 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர். அந்த நிதித்தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் எமது இருப்பில் இருந்து செலவு செய்கின்றோம். எனினும் இன்னமும் சர்வதேச நிதி உதவி எமக்குக் கிடைக்கவில்லை.

அதேபோல் சர்வதேச சந்தையில் கனிய எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதால் இலங்கையில் எண்ணெய் விலையை குறைக்க முடியாது. அது குறித்த தீர்மானம் எடுக்கும் திட்டமொன்று உள்ளது. உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தால் அதன் இலாபம் மத்திய வங்கியில் எண்ணெய் குறித்த கணக்குகளில் சேரும். இவ்வாறு நாம் 200 மில்லியன் பெற்றுக்கொள்ள நினைக்கிறோம்.

எனினும் பெற்றோலியக்கூட்டுத்தாபனம்  கடனில் உள்ள காரணத்தினால் இந்த நிதியை கடன்களை நிரப்ப பயன்படுத்வோம். எதிர்காலத்தில் இதன் பலன்களை மக்கள் அனுபவிக்க முடியும். இவ்வாறான திட்டமே எம்மிடம் உள்ளது. விலை நிர்ணயம் ஒன்றினை உறுதியாக கடைப்பிடக்க வேண்டும். அவ்வாறு கடைப்படித்தால் நெருக்கடிகள் ஏற்படும் வேலைகளிலும் மக்களுக்கு நெருகடியாகளை வழங்காது கையாள முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27