பௌத்த தர்மம் தொடர்பில் தற்போதைய அரசியலமைப்பிலுள்ள எந்தவோர் சரத்தும் திருத்தப்படவோ அல்லது மாற்றப்படவோ மாட்டாது. இது தொடர்பில் வெளியாகும் செய்திகளில் எதுவித உண்மையுமில்லை என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அரசியலமைப்பு தொடர்பான நகலோ அல்லது அதன் அடிப்படையிலான எழுத்து மூலமான விடயங்களோ இதுவரையில் தயாரிக்கப்படவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பில் ஒவ்வொரு விதத்திலான சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை மறுத்துள்ள பிரதமர் அலுவலகம் அது தொடர்பாக விளக்கமளித்து நேற்று திங்கட்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டது. அவ் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புதிய அரசியலமைப்பு தொடர்பாக சமூகத்திற்குள் பல்வேறுபட்ட தவறான கருத்துக்களை பரப்பும் அமைப்பு ரீதியான இயக்கங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இது தொடர்பில் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு தொடர்பான நகலோ அல்லது அதன் அடிப்படையிலான எழுத்து மூலமான விடயமொன்றோ இதுவரையில் தயாரிக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு நிலையில் புதிய அரசியலமைப்பில் ஒவ்வொரு விதத்திலான சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்படும் தகவல்களில் எந்தவிதமான அடிப்படை உண்மையும் கிடையாது.
விசேடமாக பௌத்த தர்மம் தொடர்பில் அரசியலமைப்பில் முன்மொழியப்பட்டுள்ள சரத்துக்களில் திருத்தங்களை மேற் கொள்ளவோ அல்லது மாற்றத்தை ஏற்படுத்தவோ எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு வெளி வரும் தகவல்களில் உண்மையுமில்லை.
" தேரவாத " பௌத்த தர்மத்தை பாதுகாத்து போஷிப்பதற்கான பொறுப்பை அரசாங்கம் எப்போதும் கடைப்பிடிக்கும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவால் இதுவரையில் தேர்தல் முறைமை, மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பரவலாக்குதல் தொடர்பான பட்டியல் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பிலான விடயங்களே கலந்துரையாடப்பட்டுள்ளன.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. இதன்மூலம் அரசியலமைப்பை தயாரிக்கும்போது மக்களின் கருத்துக்களுக்கு பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொடுப்பதே நோக்கமாகும்.
இவ் விடயத்தில் மக்கள் தமது மன விருப்பப்படி பல கருத்துக்களை முன்வைத்தனர். அவ்வாறான கருத்துக்கள் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. இதுவோர் அரசியலமைப்பு நகல் அல்ல.
மக்கள் முன்வைத்த கருத்துக்கள் வெளிப்படைத் தன்மையாக இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டன.
இக் கருத்துக்கள் அரசியலமைப்பை தயாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற இணைக்குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும். அந்தந்த இணைக் குழுக்கள் எதிர்காலத்தின் நன்மை கருதி எதிர்காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் கருத்துக்களை புதிய அரசியலமைப்பின் தயாரிப்பின்போது கவனத்தில் எடுக்கும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM