(எம்.எப்.எம்.பஸீர்)
விளக்கமறியல் கைதியான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நீர்கொழும்பு - பல்லன்சேன, புனர்வாழ்வு மையத்தில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில், மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.
நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் காரணமாக, தற்போது விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடுவோரை பல்லன்சேன சிறைச்சாலை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதன் பின்னனியிலேயே ராஜித சேனாரத்னவையும் அங்கு அழைத்து சென்றதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜயசிறி தென்னகோன் தெரிவித்தார்.
வெள்ளை வேன் விவகாரம் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன கடந்த 2019 டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி அனுமதித்த உத்தரவானது, தவறானது என கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்மானித்த நிலையில், ராஜித சேனாரத்ன அன்றைய தினம் இரவு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சரணடைந்தார். இதனையடுத்து அவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனையடுத்து அங்கிருந்து கொழும்பு விளக்கமறியல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு பதிவுகள் முடிந்ததும் நேரடியாக பல்லன்சேன தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு ராஜித சேனாரத்ன அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவரை சிறைச்சாலை வைத்தியர்கள் பரிசோதனை செய்துள்ள நிலையில், அவரை பல்லன்சேனை தனிமைப்படுத்தல் நிலையத்தின் மருத்துவ நிலையத்தில் தனிமைப்படுத்தி வைக்க வைத்தியர்கள் ஆலோசனை வழங்க்கியுள்ளனர்.
ஏற்கனவே இருதய சத்திர சிகிச்சைக்கு ராஜித சேனாரத்ன உட்படுத்தப்பட்டுள்ளதால் அவர் வழமையாக பயன்படுத்தும் மருந்துகளை வீட்டிலிருந்து பெற்று பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ள போதும், அவரை பார்வை இட பிரமுகர்கள் உள்ளிட்ட எவரும் அனுமதிக்கப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM