மூன்று தோஷங்கள், உப தோஷங்கள், தோஷங்களின் ஆவரணம், ஏழு தாதுகளின் நிலை, ஓஜஸ் எனப்படும் உயிர் சக்தியின் நிலை, விக்ருதி, பிரக்ருதிகள், பஞ்சமாபூதங்கள், தஷ நாடிகள், எந்த கண்டம் பாதிப்பு? எந்த உறுப்பு பாதிப்பு? கப வாத நாடியா? அசாத்ய நாடியா? சாத்ய நாடியா? நோயாளி செய்கின்ற தவறு, நோயாளி உண்ட உணவின் தன்மை, நோயாளிக்கு மருந்து வேலை செய்யுமா? மூன்று மலங்கள் மற்றும் கழிவு நீக்கத்திலுள்ள பாதிப்பு? ஆமம் பாதிப்பு, 13 ஸ்ரோக்ஸின் நிலை, தஷவாயுக்களில் ஏற்பட்ட பாதிப்பு, வர்ம பாதிப்பு, ஆஹாரம், தூக்கம், பிரம்மச்சர்யம் என்ற மூன்று தூண்களின் நிலைப்பாடு, நோயின் ஆறு நிலைகளில் எந்த நிலையில் உள்ளது? கரு தனித்துள்ளதா? அந்த கரு ஆணா அல்லது பெண்ணா? குழந்தை உண்டாகாமல் இருப்பதன் காரணம்? பூத நாடியின் பாதிப்பு, குரு நாடி, மனத்தின் தன்மை என எண்ணிலடங்கா விடயங்களை ஒரு ஆயுர்வேத மருத்துவர், நோயாளியிடம் பேசிக் கொண்டே அவரின் நாடியை பற்றிக்கொண்டு துல்லியமாக பரிசோதனையை செய்துவிடுவார்கள்.
இது ஆயுர்வேத மருத்துவர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படும் சிகிச்சை நடவடிக்கை என்று உறுதியாகச் சொல்லலாம். கிளினிக்கல் டயாக்னைஸ் என்றும் இதனை குறிப்பிடலாம்.
இதற்காக நீங்கள் அலோபதி மருத்துவத்திற்கு சென்றால் அவர்கள் அனைத்து விதமான பரிசோதனைகளையும் செய்யச் சொல்வார்கள். செலவு வைப்பார்கள். இறுதியில் காரணமறியா சிக்கல் என்று ஒரு பெயரை சூட்டி, நோயெதிர்ப்பு மருந்துகளை வழங்கி உங்களை. உங்களையறியாமலேயே கண்காணிக்கத் தொடங்குவார்கள்.
ஆனால் ஆயுர்வேதம் உடலியல் சிக்கல்களை துல்லியமாக கணித்து அதனை பக்கவிளைவு ஏதுமில்லாமல் நிரந்தரமாக குணப்படுத்துகிறது என்று ஆயுர்வேதத்தின் மகத்துவத்தை எளிமையாக விளக்குகிறார் டொக்டர் எஸ்.தன்வந்திரி பிரேம்வேல். இவர் மதுரையில் மூன்று தலைமுறைகளாக ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டு வரும் பரம்பரையைச் சேர்ந்தவர். அத்துடன் தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை என்ற பெயரில் மதுரையில் மட்டுமல்லாமல் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் கிளைகளை தொடங்கி அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவையை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி அவரின் விளக்கத்தைக் காண்போம்.
மூட்டு, முழங்கால் வலி, பக்கவாதம், நரம்பு தொடர்பான நோய்கள், மூச்சுத் திணறல், ஸைனஸ், தொடர் தலைவலி, ஆஸ்துமா, நீரிழிவு, தலை இறுக்கம், கழுத்து வலி, சிறுநீரகக் கோளாறுகள், மகப்பேற்றின்மை, சொரியாஸிஸ் உள்ளிட்ட பல சரும நோய்கள் என அனைத்துவிதமான கோளாறுகளுக்கும் ஆயுர்வேதத்தில் சிகிச்சையுண்டு. இதற்காக நாங்கள் பிழிச்சல், மருத்துவ நீராவிக்குளியல், நஸியம், தாரா, கிழி, நவரக் கிழி, யோகாசனம் போன்ற பல வித எளிய சிகிச்சை வழிமுறைகளில் இதற்கு தீர்வு அளித்து வருகிறோம்.
அதே போல தற்போது புத்துணர்வு சிகிச்சை என்ற பெயரில் ஒரு சிகிச்சையை வழங்கி வருகிறோம். இதன் மூலம் தோல் பராமரிப்பு மற்றும் வலுவான திசுக்கள் புத்துணர்வு பெற்று, ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறது. உடலுக்கு ‘புத்துணர்வூட்டி’ (முதன்மை சுறுசுறுப்பு) மற்றும் ‘சாத்வா’ (மனத் தெளிவை) அதிகரிக்கச் செய்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறோம். தலை மற்றும் முகத்திற்கான மருத்துவ எண்ணெய் மற்றும் கிறீம்களோடு கூடிய மசாஜ், கை, பாதம் போன்றவற்றில் மூலிகை எண்ணெய் மற்றும் தூளோடு கூடிய மசாஜ், புத்துணர்ச்சிக்காக உள் கொடுக்கப்படும் மருந்துகள், மருந்தேற்றப்பட்ட நீராவி குளியல் மற்றும் மூலிகை குளியல்களும் கூட இதன் போது பயன்படுத்தப்படுகின்றன.
அதே போல் ஒருசிலருக்கு முதுமை அடையும் செயற்பாங்கினை குறைத்து உடல் செயல்கள் சீர்கேடு அடைவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கும் முதன்மையான சிகிச்சையாக காயகல்ப சிகிச்சை வழங்கப்படுகிறது. இது இரசாயனத்தை உள்ளே எடுத்துக் கொண்டு (சிறப்பு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் உணவுக்கட்டுப்பாடு) முழுமையான உடல் பராமரிப்பு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாகும். இந்த மருத்துவம் 50 வயதிற்கு முன்பாக எடுத்துக் கொண்டால் இருபாலாருக்கும் மிகவும் பயன் தருவதாக இருக்கும்.
அதே போல் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றி தோலை மினுமினுப்படையவும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அத்துடன் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கவும் உடல் வெதுவெதுப்பூட்டல் (ஸ்வேதகர்மம்) எனப்படும் மருந்தேற்றப்பட்ட நீராவி குளியல் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமும் கிடைக்கிறது. அத்துடன் இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் மூட்டு வலி குறையவும் வாய்ப்பு உண்டாகிறது.
ஒரு சிலருக்கு உடல் எடையை குறைக்க பேரியாட்ரிக் சத்திர சிகிச்சை செய்து கொள்வார்கள் அல்லது சுப்பர்பிஷியல் லைப்போசக் ஷன் போன்ற சத்திர சிகிச்சைகளையும் மேற்கொள்வார்கள். இதன் பின்னர் அவர்கள் அறிவுறுத்தும் உணவு கட்டுப்பாட்டை ஆயுள் முழுவதும் கடைபிடிக்கவேண்டியதிருக்கும். ஆனால் ஆயுர்வேத சிகிச்சையில் உடல் எடையை குறைக்க மருத்துவ மூலிகைத்தூள் மற்றும் மருத்துவ மூலிகை எண்ணெய், மசாஜ், உணவு கட்டுப்பாட்டு, ஆயுர்வேத மருத்துவ மூலிகைச் சாறு ஆகியவை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பக்கவிளைவுகளற்ற பலன் சாத்தியமாகிறது. ஒழுக்க நடைமுறைகள் (யாமா), சுய சுத்திகரிப்பு (நயாமா), உடலை தாமரை நிலையில் நிலைநிறுத்துதல் (ஆசனா), மூச்சை கட்டுபடுத்துதல் (பிராணயாமா), உணர்வுகளை கட்டுப்படுத்துதல் (பிரத்தியகர்மா) தெரிவு செய்யப்பட்ட பொருளின் மீது எமது கவனத்தை குவித்தல் (தரானா),தியானம் (தியானா) மற்றும் சமாதி அதாவது நீங்கள் முழுவதுமான சாந்தியையும் ஆரோக்கியத்தையும் நிலைநிறுத்திக் கொள்வதற்கான நிலை என இந்த எட்டு நிலைப்பாடுகளில் ஒரு மனிதன் முழுமையாக ஈடுபடத்தொடங்கிவிட்டால் அவனுக்கு எந்த ஆரோக்கிய குறையும் ஏற்படாது என்று சொல்லலாம்.
மேலதிக விபரங்களுக்கு
தொடர்பு கொள்ளவேண்டிய
அலைபேசி எண் 0091 452 2692721 மற்றும் மின்னஞ்சல் முகவரி
drpremvel@gmail.com
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM