மகாவலி ஆற்றிலிருந்து மூதாட்டியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி மூதாட்டி, நாவலப்பிட்டி மாகும்புர பிரதேசத்தை சேர்ந்த 88 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயான கே.வெள்ளையம்மா என தெரியவந்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப்பெண் நேற்று வெற்றிலை வாங்கி வருவதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறியவர் என்றும் மகாவலி ஆற்றை ஊடறுத்து செல்லும் ரயில் பாலத்தில் நடந்து செல்கையில் தவறி ஆற்றில் வீழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸாரும் பொதுமக்களும் நேற்று மாலையிலிருந்து குறித்த வயோதிப்பெண்ணை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே ரயில் பாலத்திலிருந்து 200 மீற்றர் தூரத்தில் மகாவலி ஆற்றிலுள்ள குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டடுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM