யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையில் கடமையாற்றும் , சுன்னாகம் புகையிரத நிலைய வீதியை சேர்ந்த தே. நடேசு (வயது- 44) என்பவர் மீதே வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையில் இருந்து கடமை முடிந்து சுன்னாகத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, இணுவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு அருகில் வைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM