வெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றால் எங்களுக்கு ஐ.பி.எல். 2020 ஆம் ஆண்டு பருவக்காலம் இல்லை என சென்னை சுப்பர் கிங்ஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஐ.பி.எல். 2020 பருவக்காலம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தொடர் நடத்தப்படாமல் போனால், இந்திய மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழக்கப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்திய வீரர்களை கொண்டு தொடரை நடத்தலாம் என ஆலோசனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றால் எங்களுக்கு ஐ.பி.எல். 2020 ஆம் ஆண்டு பருவக்காலம் இல்லை என்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் தரப்பிலிருந்து வெளியான செய்தியில் ‘‘சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐ.பி.எல். போட்டியை பார்க்க முடியாது. இது மற்றொரு சையத் முஷ்டாக் அலி கிண்ணத் தொடர் (உள்ளூர் டி20 தொடர்) போன்றுதான் இருக்கும்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மோசமான சூழ்நிலைக்குப் பிறகு அணிகள் பி.சி.சி.ஐ.யை தொடர்பு கொள்ளவில்லை. இந்த ஆண்டு இறுதியில் ஐ.பி.எல். தொடர் நடக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM