முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாள் நடைமுறைகள் தொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 18 அன்று 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
இந்த நினைவேந்தல் நடைமுறைகள் தொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு இன்றையதினம் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் திட்டமிட்டு தமிழினம் வயது வேறுபாடன்றி, பால் பாகுபாடின்றி துடி துடிக்கக் கொல்லப்பட்ட 11 ஆம் ஆண்டுநிறைவு எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நின்னைவேந்தல் மைதானத்தில் உணர்வெழுச்சியுடன் முற்பகல் 10:30 மணிக்கு நினைவுகூரப்படும் .
இது ஓர் தேசிய நினைவெழுச்சி நாள், உட்பூசல்களைத் தவிர்த்து தமிழ்த்தேசியத்தால் ஒன்று௯டும் நாள். கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காய் நீதி வேண்டிய பயணத்தில் தமிழராய் ஒன்றிணையும் நாள்.
அன்றயதினம் மாலை 7 மணிக்கு அனைத்து வணக்கஸ்த்தலங்களிலும் விசேட மணி ஒலி எழுப்பி இப்பேரவலத்தை நினைவேந்துமாறும் அச்சந்தர்ப்பத்தில் வீடுகளில் தீபங்கள் ஏற்றி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு௯ருமாறும் முள்ளிவாய்க்கால் பேரவல நிலமையை நினைவுபடுத்தும் வகையில் அன்றயதினம் கஞ்சி தயாரித்து பகிர்ந்து கொள்ளுமாறும் தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM