(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாரிய நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், உலகலாவிய ரீதியில் பொருத்தப்பாடுடைய உணவுப் பாதுகாப்புக் கொள்கையொன்றின் ஊடாகத் தற்போது விவசாயத்துறையை மேம்படுத்த முடியும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
எமது நாட்டைப் பொறுத்தவரை 44 சதவீத நிலப்பரப்பு விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது அதேபோன்று நாட்டில் மொத்த ஊழியப்படையில் நான்கில் ஒரு பகுதியினர் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். அவ்வாறிருந்தும் கூட எமது மொத்தத் தேசிய உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்பு 7.8 சதவீதம் மாத்திரமேயாகும்.
தற்போது உலகெங்கிலும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாரிய நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில் விவசாயத்துறையின் பக்கம் அனைவரதும் அவதானம் திரும்பியிருக்கிறது. எனினும் அதனை வெற்றிகரமாகச் செய்வதற்கு உலகலாவிய ரீதியில் பொருந்தத்தக்க உணவுப் பாதுகாப்புக் கொள்கையொன்று அவசியமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM