இலங்கையில் நடைபெறவிருந்த ஐ. சி. சி. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிகாண் சுற்று உட்பட இரண்டு தகுதிகாண் சுற்று கிரிக்கெட் போட்டிகளை கொரோனா நோய்த் தாக்கம் காரணமாக பிற்போட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிவித்தது.
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிகாண் சுற்று இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதிமுதல் 9ஆம் திகதிவரை நடைபெறவிருந்தது.
19 வயதுக்குட்பட்ட 2022 உலகக் கிண்ணப் போட்டிக்கான ஐரோப்யிய வலயம் இரண்டாம் பிரிவுக்கான தகுதிகாண் சுற்று டென்மார்க்கில் ஜூலை மாதம் நடைபெறவிருந்தது.
சர்தேச கிரிக்கெட் பேரவையின் விரிவான திட்டமிடல் செயற்பாட்டின் ஒர பகுதியாகவும் உறுப்பு நாடுகள் மற்றம் சம்பந்தப்பட்ட அரசுகள், பொது சுகாதார அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னரே இப் போட்டிகளைப் பிற்போடத் தீர்மானித்ததாக சர்வதேச கிரிக்கெட் பெரவை தெரிவித்தது.
இந்தப் போட்டிகளை எப்போது நடத்துவது என்பது குறித்து பங்குபற்றும் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடப்படும் எனவும் பேரவை குறிப்பிட்டது.
மகளிர் உலகக் கிண்ண 2021 தகுதிகாண் சுற்றில் வரவேற்பு நாடான இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், பிராந்திய சம்பியன்களான ஸிம்பாப்வே, தாய்லாந்து, பப்புவா நியூ கினி, நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகியன விளையாடவிருந்தன.
தகுதிகாண் சுற்றில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகள் ஏற்கனவே மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டுள்ள நடப்பு சம்பியன் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தியா, நியூஸிலாந்து ஆகிய வற்றுடன் இணைந்துகொள்ளும். (என்.வீ.ஏ.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM