(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் பதொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 884 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் இரவு 10.00 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் 9 கடற்படையினர் உட்பட 15 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை இவ்வாரு உயர்ந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கூறினார்.
இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களில் 455 முப்படையினர் உள்ளடங்குவதாகவும் அதில் 443 பேர் கடற்படையினர் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
இந் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 23 தொற்றாளர்கள் இன்று பூரண சுகமடைந்து வீடு திரும்பினர். அவ்வாறு குணமடைந்தவர்களில் 14 பேர் கடற்படையினராவர். அதன்படி இன்று வரை 366 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் மேலும் 504 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன் மேலும் 117 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM