சர்வதேச விசாரணையை கோரி ஜெனிவாவில் உபகுழு கூட்டங்கள்: முன்னாள் போராளிகளும் பங்கேற்பு

Published By: Priyatharshan

27 Jun, 2016 | 07:02 PM
image

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீ கஜன்)

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இடம்பெறுகின்ற உப குழுக்கூட்டங்களில் தமிழ்த் தரப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு விளக்கமளித்து வருகின்றனர். 

குறிப்பாக வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர் இந்த உப குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் விளக்கமளித்து வருகின்றனர். 

இன்றைய தினம் ஜெனிவா மனித உரிமை வளாகத்தில் நடைபெற்ற உப குழுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டிருந்த வடமாகாண சபை  உறுப்பினர் அனந்தி சசிதரன், முன்னாள் போராளிகளை கொண்டு இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.

இதேவேளை நாளைய தினம் மனித உரிமை பேரவை வளாகத்தில் 3 மணியளவில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான உப குழுக்கூட்டத்தில் அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். 

இந்த உப குழுக்கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளமை உரையாற்றவுள்ளார். 

இலங்கை அரசாங்கம்  சர்வதேச அரசசார்ப்பற்ற நிறுவனங்கள்,  மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள்  போன்ற தரப்பினர்  உப நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இந்த  உபகுழுக் கூட்டங்களில்  அரசியல்வாதிகள்  சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,  இராஜதந்திரிகள்   மனித உரிமை காப்பாளர்கள்  பாதிக்கப்பட்ட மக்கள் என  பல்வேறு தரப்பினரும்   கலந்துகொண்டு  தமது  யோசனைகளை முன்வைத்து வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19