(நா.தனுஜா)
எதிர்வரும் பொதுத்தேர்தலை நடாத்துவதற்கான திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் வலியுறுத்தியிருக்கிறார்.
தேர்தல் திகதி குறித்த தீர்மானத்தை மேற்கொள்வதற்கான கலந்துரையாடலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பினும்> இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று அகிரவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதுமாத்திரமன்றி கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதியளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மிக உயர்வாக இருந்தபோதிலும்> வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிள்குள் இருப்பதாகவும் அரசாங்கம் அறிவித்தமை குறித்தும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
எனவே இத்தகையதொரு நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு தனது முழுமையான அதிகாரங்களைப் பயன்படுத்துவதுடன்> சுகாதாரப் பிரிவினருடன் கலந்தாலோசித்து நாட்டுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM