குறைந்த பட்சம் ரசிகர்களின் பங்குபற்றல் இல்லாமலாவது பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியை நடத்துவோம் என போட்டி அமைப்பாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்துள்ள பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இம்மாதம் 24 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிப்பட்டிருந்தது.
எனினும், கொரோனா வைரஸ் அச்சத்தால் இப்போட்டியை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் அக்டோபர் 4 ஆம் திகதி வரை பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி நடைபெறும் என அமைப்பாளர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை பார்க்கும்போது இந்த போட்டி ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்தில் நடத்தப்படலாம் என்று பிரெஞ்ச் டென்னிஸ் சங்க தலைவர் பேர்னாட் குடிசெலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
‘‘ரசிகர்களின்றி இப்போட்டி நடத்தப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. போட்டி வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதே முக்கியம்.
இப்போட்டியைக் காண உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ரசிகர்கள் இல்லாமல் நடந்தாலும், தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு மூலமாக போட்டிகளை ரசிகர்களுக்கு பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்’’என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM