கொரோனாவுக்கு பின்னரான தேர்தல் ஆறுமாதம் கழித்து நடைபெற்றாலும் இப்போது திட்டமிட்ட தேர்தல் செலவுகளை விட இருமடங்கு தேர்தல் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்ததாக தொழிலாளர் தேசிய முன்னணி பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற கட்சி செயலாளர் கூட்டத்தில், நாட்டில் மக்கள் வருமானம் இழந்து நிவாரணம் பெற்று வாழும் சூழலில் தேர்தல் ஒன்று நடாத்தப்படுமானால் அது நாட்டுக்கு பெரும் செலவை உருவாக்கும்.
அதேநேரம் ஏற்கனவே திட்டமிட்டதை விட தேர்தல் செலவுகள் அதிகரிக்குமா என தான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே,
அவை இரண்டு மடங்காகும் வாய்ப்புள்ளதாக ஆணைக்குழு தலைவர் கூறியதாக எம். திலகராஜ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழலில் முககவசம், தொற்றுநீக்கி, உள்ளிட்ட அனைத்து புதிய நடைமுறைகளுக்காகவும் இந்த செலவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதுபற்றி சரியான கணிப்பீடுகள் ஆணைக்குழு கூடி ஆராய்ந்து இனிவரும் நாட்களில் கூறும் எனவும் தெரிவித்ததாகவும் திலகராஜ் உறுதி செய்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM