நேருக்குநேர் மோதிய வேன் - லொறி : மூவர் படுகாயம் - குடாகமவில் சம்பவம்

Published By: J.G.Stephan

12 May, 2020 | 05:12 PM
image

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன், நுவரெலியா பிரதான வீதியில், குடாகம பகுதியில் இன்று (12.05.2020) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.



காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கம்பளையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வேனும், தலவாக்கலையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற சிறிய ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.



மேலும், வேனின் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

வேன் சாரதியும், லொறியில் பயணித்த இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 



முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37