(இராஜதுரை ஹஷான்)
சுகாதார தரப்பினரது பரிந்துரை மற்றும் ஆலோசனைகளுக்கு அமையவே பொதுத்தேர்தல் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும். அரசாங்கம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கிக்காது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி,ஐக்கிய மக்கள் சக்தி ஆகியோர் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள். தேர்தலை எதிர்க் கொள்ளும் அச்சத்திலேயே இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.
பொதுத்தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பொதுஜன பெரமுனவினால் முறையாக வகுக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
பொதுத்தேர்தலை இலக்காக கொண்டு ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்படவில்லை. சவால்களை பாதுகாப்பான முறையில் வெற்றிக் கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதன் காரணமாகவே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
சுகாதார தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமையவே அரசாங்கம் பொதுத்தேர்தல் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்.
பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்துடன் ஆட்சியமைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM