தமி­ழ் மக்­க­ளை ஏமாற்­றி மீண்­டும் குழப்பம் ஏற்­ப­டுத்­த வேண்­டாம் ; கை­தி­களை எப்­போது விடு­விப்­பீர்கள்

Published By: Priyatharshan

08 Dec, 2015 | 10:01 AM
image

அர­சியல் தீர்வு தொடர்பில் அர­சாங்கம் என்ன வாக்­கு­று­தி­களை வழங்­கி­யதோ அதை அவ்­வாறே நிறை­வேற்ற வேண்டும். தமிழ் மக்­களை ஏமாற்றி மீண்டும் நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது.

அர­சியல் கைதி­களின் விடு­த­லையை எப்­போது அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்தும் எனவும் அக்­கட்சி கேள்வி எழுப்­பி­யது.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் அர­சாங்கம் தொடர்ந்தும் இழுத்­த­டிப்­பு­களை மேற்­கொண்டுவரும் நிலையில் அது தொடர்பில் வின­வி­ய­போதே கட்­சியின் பொதுச் செய­லாளர் டில்வின் சில்வா மேற்­கண்­ட ­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த காலங்­களில் நாட்டில் நில­விய மோச­மான அரசியல் செயற்­பா­டுகள் கார­ண­மாக இந்த நாட்டில் பல­மான இன­வாத முரண்­பா­டு­களே உரு­வெ­டுத்­தன.

யுத்­தத்தை வெற்­றி­கொண்­ட­தாக கூறிக்­கொண்டு நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களை மட்­டுமே இவர்கள் பரப்­பினர். வடக்கில் மக்கள் தமது நிலைப்­பாட்டை தெளி­வாக முன்­வைக்­கவோ முஸ்­லிம்கள் தமது மத உரி­மை­களை பின்­பற்­றவோ இட­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை. இரா­ணு­வத்தை பலப்­ப­டுத்தி சிறு­பான்மை மக்­களை அச்­சு­றுத்­தி­யமை சர்­வ­தேச அளவில் கொண்டு செல்­லப்­பட்­டது. அதுவே இலங்கை மீதான சர்­வ­தேச அழுத்­தங்கள் ஏற்­ப­டவும் கார­ண­மாக அமைந்­தது.

மேலும் நாட்டில் அனைத்து மக்­களும் அமை­தி­யா­கவும் உரி­மை­க­ளு­டனும் வாழக்­கூ­டிய அர­சியல் தீர்வு ஒன்று பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாடு அனைத்து தரப்­பி­டமும் காணப்­பட்­டது. குறிப்­பாக தமிழ் மக்­களின் ஒரே நிலைப்­பாடும் அது­வா­கவே காணப்­பட்­டது. அந்த கார­ணங்­களை அடிப்­ப­டையில் வைத்தே தற்­போது ஆட்­சி­மாற்றம் வரையில் வந்­துள்­ளது. ஆகவே புதிய அர­சாங்கம் ஆட்­சியை கொண்­டு­செல்ல தயா­ரான போது நாட்டில் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை மீண்டும் நினை­வு­ப­டுத்த நாம் விரும்­பு­கின்றோம்.

இந்த நாட்டில் ஏற்­ப­டுத்­து­வ­தாக கூறிய அர­சியல் தீர்வு எங்கே? அர­சியல் ரீதியில் ஏற்­ப­டுத்­து­வ­தாக கூறப்­பட்ட மாற்­றங்கள் எங்கே? ஆகவே இப்­போ­தா­வது சிறு­பான்மை மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும். அதேபோல் நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்த மேற்­கொள்­வ­தாக கூறிய நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். இப்­போதும் சிறு­பான்மை மக்­களை ஓரம்­கட்டும் பொய்­யான வாக்­கு­று­தி­களை கொடுத்து நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தக் கூடாது.

மேலும் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் அர­சாங்கம் இழுத்­த­டிப்­பு­களை மேற்­கொள்­கின்­றது என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் தமிழ் அர­சியல் கைதி­களை விடுவிப்பதாக கூறிய அரசாங்கம் இன்றுவரை அவர்களை தடுத்து வைத்திருப்பது ஏன். கடந்த காலத்தில் முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட கண்துடைப்பு அரசியல் இவர்களும் கையாளக்கூடாது. ஆகவே உடனியாக தமிழ் கைதிகளின் விடுதலையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47