முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாளைய தினம் அரசியலமைப்பு பேரவை சிறப்புக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இக் கூட்டமானது நாளை மாலை 4.30 மணிக்கு முன்னாள் சபாநாயகரின் உத்தியோபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதுடன், இதில் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய கொரோனா நெருக்கடி, தேர்தல் தொடர்பான அறிவிப்பு மற்றும் பாராளுமன்றை கூட்டுமாறு முன்வைக்கப்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியிலேயே இந்த அரசியலமைப்பு பேரவைக் கூட்டமானது இடம்பெறவுள்ளது.
அரசியலமைப்பு பேரவை கூட்டமானது இறுதியாக ஏப்ரல் 23 ஆம் திகதியன்று கூடியது. பாராளுமன்றம் கலைக்கப்பட் நிலையிலும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பொதுத் தேர்தல் நடைபெற்று புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படும் வரையில் தலைவராக செயற்படுவார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்துக்கு அமைய, பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்புவாய்ந்த அமைப்பு அரசியலமைப்பு பேரவையாகும்.
அரசியலமைப்பு பேரவையின் தலைமை பதவியை சபாநாயகர் வகிக்கும் அதேவேளை, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் ஏனைய 10 உறுப்பினர்களுள் உள்ளடங்குகின்றனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.சம்பந்தன், பிமல் ரத்நாயக்க, மஹிந்த சமரசிங்க மற்றும் தலதா அத்துகோரள மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் ஜாவேத் யூசுப், நாகானந்தா செல்வகுமாரன் மற்றும் டாக்டர் ஜெயந்த தனபாலா ஆகியோர் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களாவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM