கூட்டமைப்பை விமர்சிப்போருக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை - சம்பந்தன்

Published By: J.G.Stephan

10 May, 2020 | 08:44 AM
image

 (ஆர்.ராம்)



அரசியல் இலாபங்களை அடைவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ள அதன் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்துவோம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டிய தரப்பினருடன் உரிய நேரத்தில் பேச்சுக்களை முன்னெடுப்போம் என்று கூறிய அவர் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் செயற்பாடுகளை புரிந்து கொண்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனான(முன்னாள்) கூட்டம் மற்றும் கூட்டமைப்பின் பிரத்தியேக சந்திப்பு ஆகிய தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் குறி;த்து வினவியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள அத்தனை தமிழ்க் கட்சிகளும் கூட்டமைப்பை விமர்சிப்பதையே பிரதான கருமமாக கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்களின் விமர்சனங்களுக்கெல்லாம் நாம் பதிலளிக்க வேண்டிய அவசிமில்லை.

நாம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சந்தர்ப்பங்களை உரிய தருணங்களில் பயன்படுத்தியுள்ளோம்.

தொடர்ந்தும் பயன்படுத்துவோம். அதில் மாற்றுக்கருத்திற்கு இடமிருக்க முடியாது. அந்த வகையில் தான் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளுக்குள் பிரதமர் அனைத்து உறுப்பினர்களுக்கான சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த சந்திப்பில் நாம் கலந்து கொண்டோம். எமது மக்களின் சமகால நெருக்கடிகள், அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் தீர்வுகள்ரூபவ் அரசியலமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்டு அறிக்கையொன்றையும் கையளித்திருந்தோம்.

அதனையடுத்து பிரதமருக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்றும் நடைபெற்றது.

இதன்போது நாம் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தோம். ஐந்து தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் சாசனத்தினை தொடர்ந்தும் பின்பற்ற முடியாது.

அதன் மீதான மதிப்பும் மரியாதையும் இழக்கப்பட்டாகிவிட்டது. ஆகவே தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அமைவாக புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அத்துடன் தமிழ் மக்களின் இதரபிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதில் வேறுகாரணங்களைக் காட்டி தமதப்படுத்த முடியாது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சமாந்தரமாக ஜனநாயக பண்புக்களுக்கு மதிப்பளித்து சட்டத்தின் ஆட்சி முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்த விடயங்களை பிரதமரிடத்தில் பேசுவது தவறா? மேற்கூறிய விடயங்களுக்கு தீர்வு காண முயலாது இருக்க வேண்டுமா? நாம் பேசவேண்டிய விடயங்களை பேசவேண்டியவர்களுடன் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். ஆகவே எமது செயற்பாடுகள் பற்றி விமர்சிப்பவர்களுக்கு அப்பால் அவைபற்றிய சரியான புரிதல் பொதுமக்களுக்கு உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21