அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் செயற்படவில்லை : சுசில்

Published By: J.G.Stephan

09 May, 2020 | 04:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் செயற்படவில்லை. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும்.

நாளை மறுதினம் முதல் சேவையில் ஈடுபடவுள்ளவர்கள் பொறுப்புடன், பாதுகாப்புடன் செயற்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.



பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவல் ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், நோய் பரவல் பகுதிகளும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட ஏனைய சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் தளர்த்தப்பட்டவுள்ளது. அரச, தனியார் துறையினர் சேவையில் ஈடுப்படுவதற்கான விசேட வழிமுறைகள் பாதுகாப்பு காரணிகளை அடிப்படையாக கொண்டு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும், கொரோனா வைரஸ் ஒழிப்புக்குக்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும். ஆகவே பொதுமக்கள் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலத்தை காட்டிலும் பொறுப்புடன் செயற்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுயாதீன தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியினர் வரலாற்று சம்பவங்களை மறந்து விட கூடாது.

ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட்டதை போன்று பொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுன அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்தே பொதுத்தேர்தலில் போட்டியிடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50