கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கையானது எதிர்வரும் 11 ஆம் திகதி மீள தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் மார்ச் 20 ஆம் திகதி ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து கொழும்பு பங்குச் சந்தையின் 7 வார கால செயலற்ற தன்மை முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
திங்கட்கிழமை முதல் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்ததன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,
கொழும்பு பங்குச் சந்தைதயின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ பண்டாரநாயக்க, பங்குதாரர்களிடம் சுகாதார அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க தங்கள் வணிக நடவடிக்கைகள் நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கையில் கொவிட் -19 பரவுவதைத் தொடர்ந்து 2020 மார்ச் 16 ஆம் திகதி முதல் கொழும்பு பங்குச் சந்தையானது மூடப்பட்டது. அதன் பின்னர் மார்ச் 20 அன்று வரையறுக்கப்பட்ட வர்த்தக காலத்திற்கு மாத்திரம் திறக்கப்பட்டது.
அன்றைய தினம் மாலை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து எந்த வர்த்தகமும் இடம்பெறவில்லை.
இதனால் கொழும்பு பங்குச் சந்தையானது கொவிட் -19 காரணமாக பிராந்தியத்தில் மிக நீண்ட காலமாக மூடப்பட்ட பங்குச் சந்தையாக மாறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM