7 வாரத்திற்கு பின் மீண்டும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள கொழும்பு பங்குச் சந்தை !

Published By: Vishnu

09 May, 2020 | 11:37 AM
image

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கையானது எதிர்வரும் 11 ஆம் திகதி மீள தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் மார்ச் 20 ஆம் திகதி ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து கொழும்பு பங்குச் சந்தையின் 7 வார கால செயலற்ற தன்மை முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

திங்கட்கிழமை முதல் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்ததன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, 

கொழும்பு பங்குச் சந்தைதயின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ பண்டாரநாயக்க, பங்குதாரர்களிடம் சுகாதார அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க தங்கள் வணிக நடவடிக்கைகள் நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கையில் கொவிட் -19 பரவுவதைத் தொடர்ந்து 2020 மார்ச் 16 ஆம் திகதி முதல் கொழும்பு பங்குச் சந்தையானது மூடப்பட்டது. அதன் பின்னர் மார்ச் 20 அன்று வரையறுக்கப்பட்ட வர்த்தக காலத்திற்கு மாத்திரம் திறக்கப்பட்டது. 

அன்றைய தினம் மாலை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து எந்த வர்த்தகமும் இடம்பெறவில்லை. 

இதனால் கொழும்பு பங்குச் சந்தையானது கொவிட் -19 காரணமாக பிராந்தியத்தில் மிக நீண்ட காலமாக மூடப்பட்ட பங்குச் சந்தையாக மாறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11