நாட்டில் மஞ்சளுக்கு நிலவும் தட்டுப்பாட்டை நீக்க பல திட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாட்டின் தேவைக்காக, வருடத்துக்கு சுமார் 7 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் மஞ்சள் தேவைப்படுவதாகவும் ஆனால், கடந்த வருடம் வரை இதில் ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் மாத்திரமே இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் மிகுதி 5 ஆயிரத்து 400 மெட்ரிக் தொன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
எனினும், கடந்த வருட இறுதியில், மஞ்சள் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்தே மஞ்சள் தூளுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்தது என்றும் அவர் கூறினார்.
மேலும், குறித்த தட்டுப்பாட்டை நீக்குவதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக, சுங்கப்பிரிவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 600 மெட்ரிக் தொன் மஞ்சளை, சந்தைக்கு அனுப்பவுள்ளதாகவும் இவ்வருடம் சுமார் 2 ஆயிரத்து 200 ஹெக்டெயாரில் புதிதாக மஞ்சள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM