2021 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி இரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அவுஸ்திரேலிய டென்னிஸ் சங்கத்தின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மெல்பர்னில் நடத்தப்பட்டு வருகிறது.
இன்னமும் 8 மாதங்கள் எஞ்சியிருந்தாலும் அடுத்த ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி இரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அவுஸ்திரேலிய டென்னிஸ் சங்கத்தின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
‘ஆட்கொல்லி நோயான கொரோனா பரவலை தடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியுள்ளது. உள்ளூர் ரசிகர்கள் மட்டுமே அனுமதி மற்றும் வெளிநாட்டு வீரர்களை தனிமைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் போட்டியை இரத்து செய்ய நேரிடலாம்.
ஆனாலும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு சகலவிதமான அம்சங்களையும் கவனத்திற்கொண்டு தீவிர முயற்சி எடுப்போம்’ என்றும் அவர் கூறினார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM