2020 ஆம் ஆண்டு டென்னிஸ் விளையாட்டுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரெஞ்ச் பகிரங்க போட்டி செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பகிரங்க போட்டி நடைபெறுமா? என்ற கேள்வியும் உள்ளது. மேலும் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர்களும் நடைபெறுமா? என்ற கேள்விக்குறியுடன் உள்ளன.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு டென்னிஸுக்கு மிகப்பெரிய இழப்பு. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் டென்னிஸ் போட்டி மீண்டும் ஆரம்பமாகும் என நம்புவதாக ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடால் கூறுகையில் ,
‘‘டென்னிஸ் போட்டிகள் முடிந்தளவுக்கு விரைவாக ஆரம்பமாகும் என நம்புகிறேன். ஆனால், ஒவ்வொரு வாரமும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்வது, ஹோட்டலில் தங்குவது, விமான நிலையம், ஏனைய பகுதிகளுக்கு செல்வது குறித்து யோசிக்கிறேன்.
2021 ஜனவரிக்குள் இயல்பு நிலைக்கு திரும்பி, போட்டிகளை வழக்கம்போல் நடத்தலாம் என்று உத்தரவாதம் கொடுத்தால் கண்ணை மூடிக்கொண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு கையெழுத்திட தயாராகவுள்ளேன்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள டென்னிஸ் தொடர்களை விடவும், அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியை அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். டென்னிஸ் இந்த 2020 ஆண்டை இழந்து விட்டதாகவே பார்க்கிறேன்’’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM