இலங்கையின் மனித உரிமை நிலைமை மற்றும் உள்ளக விசார ணைப்பொறிமுறை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் நாளை மறுதினம் புதன்கிழமை வாய்மூல அறிக்கையை ஜெனிவா கூட்டத் தொடரில் வெளியிடவுள்ள நிலையில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் ஜெனிவாவில் பல்வேறு சந்திப்புக்களை நடத்திவருகின்றன.
குறிப்பாக ஜெனிவா மனித உரிமை பேரவைக்கான அமெரிக்காவின் வதிவிட நிரந்தர பிரதிநிதி கீத் ஹாபரை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் அண்மையில் சந்தித்துள்ளன. இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
விசேடமாக இலங்கையானது ஜெனிவாப் பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமெனவும் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் பொதுநலவாய நீதிபதிகளை உள்ளடக்கவேண்டுமெனவும் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது இலங்கையின் முன்னேற்ற நிலைமை தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் எதிர்வரும் புதன்கிழமை வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ள நிலையிலேயே இவ்வாறான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் புலம்பெயர் அமைப்புக்கள் ஐ.நா. மனிதஉரிமை பேரவையின் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துவருகின்றன. இதன்போது இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் உதவிகளை வழங்குமாறு கோரப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM