(நா.தனுஜா)
பொதுத்தேர்தலை நடத்துவதாயின் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு அணுகுமுறைகள் தொடர்பான முழுமையான அறிக்கை இன்னமும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், முக்கிய அடிப்படை விடயங்களடங்கிய இடைக்கால அறிக்கை மாத்திரமே கையளிக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
சில ஊடகங்களினால் வெளியிடப்பட்ட செய்திகளை நோக்குகையில், பொதுத்தேர்தலை நடத்துவதாயின் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு அணுகுமுறைகள் தொடர்பான முழுமையான அறிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது என்ற தவறான புரிதல் மக்கள் மத்தியில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தோன்றியது.
சுகாதாரப் பாதுகாப்பு குறித்த அடிப்படை விடயங்களடங்கிய இடைக்கால அறிக்கையை மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
இறுதி அறிக்கையில் உள்ளடக்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் இன்னமும் ஆராயப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தப்படவுள்ள காலப்பகுதி, அப்போது காணப்படத்தக்க சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கருத்திற்கொண்டே பரிந்துரைகளை முன்வைக்க முடியும் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM