பாலஸ்தீனின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத குழுக்களுக்கு சொந்தமான மூன்று தளங்களை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆபத்தான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து ஒரு மாத காலத்திற்கும் மேலான நிலையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
காசாவிலிருந்து இஸ்ரேல் நோக்கி ஹமாஸ் பயங்கரவாத குழுக்கள் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலளிக்கும் முகமாகவே இஸ்ரேலிய இராணுவத்தினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வடக்கு மற்றும் மத்திய காசாவில் உள்ள ஹமாஸ் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுக்கு சொந்தமான தளங்கள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் அந் நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலினால் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளதுடன், இதற்கு ஹமாஸ் சார்பில் எதுவித கருத்துக்களும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.
கொரோனா அச்சம் காரணமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிக்கிடையல் வன்முறைச் சம்பவங்கள் மார்ச் மாத இறுதியிலிருந்து மந்த கதியில் உள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM