ஜேர்மனில் இம்மாத நடுப்பகுதி முதல் கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பிக்க வாய்ப்புள்ள நிலையில், பொருஸ்சியா டோர்ட்மண்ட் அணி தமது வீரர்கள் ஒவ்வொருவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தியது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஜேர்மனும் ஒன்று. கடந்த மார்ச் 13 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜேர்மனியின் முதன்மை கால்பந்தாட்டத் தொடரான பண்டஸ்லிகா கால்பந்தாட்டத் தொடர் இரத்து செய்யப்பட்டது.
ஊரடங்கை பிறப்பிக்காமல் அதிவேக பரிசோதனை மூலம் கொரோனா தொற்றின் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஜேர்மன், இம்மாதம் 16 ஆம் திகதியிலிருந்து கால்பந்தாட்டப் போட்டிகளை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பண்டஸ்லிகா தொடரில் விளையாடும் பொருஸ்சியா டோர்ட்மண்ட் அணி தனது வீரர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தது. இதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
மிகப்பெரிய அளவில் உறுதித் தன்மையை அறிந்து கொள்ளுவதற்கு மேலதிக பரிசோதனை தேவைப்படுவதாக அந்த கால்பந்தாட்டக் கழகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM