கிண்ணியா பொலிஸ் பிரிவு , பகுதியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது அவ்வழியால் மோட்டர் சைக்கிளில் சென்ற இருவரை பொலிஸார் என நினைத்து அவர்களிடமிருந்து தப்பிக்க கடலில் பாய்ந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சோக சம்பவம் கிண்ணியா சோலை வெட்டுவான் எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா - 03 மதினா நகர் யுனைதீன் - பாஹீம் (வயது -21) என்னும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று இரவு அதே நீரேந்து பகுதியில் சடலமாக மீட்கப்பட்டு, மதீனா நகர் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞர் மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது அவ் வழியால் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பொலிஸார் என நினைத்து மறு கரைக்குச் செல்வதற்காக கடலில் .இறங்கிய இந்த இளைஞர் மாயமாகியுள்ளார்.
இதையடுத்து காணாமல்போன இளைஞனை தேடுவதற்காக சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் , கடற்படையினரும் இணைந்து தேடுதல் மேற்கொண்டு வந்திருந்த நிலையில் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM