கொரோனாவால் 9 ஆவது நபரின் உயிரிழப்பையடுத்து அவரது குடியிருப்பிலுள்ள 1,200 பேரை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்த உத்தரவு!

Published By: Vishnu

06 May, 2020 | 10:43 AM
image

நாட்டில் கொரோனாவினால் ஒன்பதாவது உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்ற கொழும்பு - 15, மோதரையில் உள்ள மெத்சந்த செவன வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் ஒழு குழுவினரை பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் முதன்கட்டமாக இன்றைய தினம் 60 பேர் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார பிரிவுகள் தெரிவித்துள்ளன.

அத்துடன் மெத்சந்த வீட்டுத் திட்டத்தின் B பிரிவில் 1,200 குடியிருப்பாளர்களை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ராஜகிரிய, பண்டாரநாயக்கபுர மற்றும் கொலன்னாவை, சாலமுல்ல பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்களையும் பி.சி.ஆர். சோதனைக்குட்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று 1,396 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி 18 முதல் 29,283 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  கொழும்பு 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவின்  மெத்சந்த செவன தொடர் மாடி குடியிருப்பைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று உயிரிழந்தார்.

முகத்துவாரம் -  மெத்சந்த செவன தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் 5 பிள்ளைகளின் தாயொருவர், மூச்சுத் திணறல் காரணமாக நேற்று முன்தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அங்கு அவருக்கு பி.சி.ஆர். எனும் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, அவருக்கு கொரோனா இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உடனடியாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அப்போதும் குறித்த பெண்ணின் நிலை தீவிரமாக இருந்துள்ள நிலையில், உடனடியாகவே தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு  சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், நேற்றுக் காலை குறித்த பெண் சிகிச்சைப் பலனின்றி  உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10