இயக்குனர் ஹரி இயக்கத்தில், சூர்யா நடிக்கவிருக்கும் ‘அருவா ’ படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை ராசி கண்ணா நடிக்கிறார்.
‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா. அதனைத் தொடர்ந்து ‘அடங்கமறு’, ‘அயோக்யா’.‘ சங்கத்தமிழன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கத்தினால் நட்சத்திரங்கள் தங்களுடைய ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் மூலமாக உரையாடி வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை ராசி கண்ணா ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் உரையாடினார்.
அப்போது அவர் பேசுகையில்,‘ தமிழில் தனக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய் என்றும், தெலுங்கில் தமக்குப் பிடித்த நடிகை சமந்தா என்றும், தமிழில் தனக்கு பிடித்த இயக்குனர்கள் வெற்றிமாறன், ஷங்கர், மணிரத்னம், அட்லி என்று குறிப்பிட்ட நடிகை ராசி கண்ணா, தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என்ற படத்தில் நடித்து வருவதாகவும், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘அருவா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் தற்போதைய லொக்டவுன் காலகட்டத்தில் சுய முன்னேற்றம் தொடர்பான கட்டுரைகளையும், வீடியோக்களையும் வாசித்து வருவதாகவும், பார்வையிட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM