மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள சின்னப்புல்லுமலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 6 வயது சிறுவனொருவன் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் இன்று செவ்வாய் கிழமை (05.05.2020) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
நொச்சிமுனை தரிசனம் வீதியைச் சேர்ந்த 6 வயதுடைய றொபட் டினேஷ் ஹனபன் ஹொசேயா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புல்லுமலை பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ சபை ஒன்றை நடாத்திவரும் போதகர், அவர் மனைவி 2 வயது பெண்பிள்ளை உயிரிழந்த சிறுவன் ஆகியோர் , சம்பவத் தினமான இன்று காலை குறித்த சபைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பகல் 1-30 மணியளவில் வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது, சின்ன புல்லுமலை பிரதேசத்தில் வாகனம் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் உயிரிழந்த சிறுவனின் சடலம் மட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM