(எம்.மனோசித்ரா)
ஓய்வு பெற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் மாதாந்தம் 10 ஆம் திகதி ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் இம் மாதம் வெசாக் உற்சவம் மற்றும் தொடர்ச்சியான விடுமுறைக்காலம் என்பதால் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் ஓய்வு பெற்றுள்ள ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் ஓய்வூதியம் வழங்கப்பட்டதைப் போன்றே மாவட்ட செயலாளர்கள் , பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் கிராம சேவகர்கள் உள்ளிட்ட கிராம மட்டத்தில் சேவையாற்றும் அதிகாரிகளின் அமைப்புக்கள் , முப்படையினர் மற்றும் இலங்கை போக்குவரத்துசபையுடன் ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வசிக்கும் ஓய்வூதியம் பெற இருப்பவர்களை வங்கிகளுக்கு அழைத்துச் செல்லல் , இதன் போது அவர்களுக்குத் தேவையான மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்கு பாமசிக்கு அழைத்துச் செல்லல் உள்ளிட்டவற்றுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM