(செ.தேன்மொழி)
பெல்மடுல்ல மற்றும் மோதர ஆகிய பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைபொருளுடன் இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
பெல்மடுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டலந்த பகுதியில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது மூன்று கிராம் 40 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மொதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது 2 கிராம் 860 மில்லி கிராம் ஹெரோயினுடன் மேலும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பகுதியைச் சேர்ந்த 49வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM