தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், இரண்டு விமானப்படை வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிவியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டிரினிடாட் நகரில் சிக்கியிருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சிலரை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ விமானம் ஒன்றே கடந்த சனிக்கிழமை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில், ஸ்பெயின் நாட்டினர் 4 பேரும், விமானி உள்பட 2 வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்குள்ளாகியுள்ள பீச் கிராஃப்ட் பரோன் பி -55 என்ற இலகுரக விமானம் இயந்திரம் செயலிழந்ததால் விமானம் புறப்பட்டு 12 நிமிடங்களுக்குப் பிறகு டிரினிடாட்டில் உள்ள விமான நிலையத்திற்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக விமானி தெரிவித்ததாகவும் அப்போது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிவியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக இராணுவம் இறக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 1,500 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியும் 71 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM