பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் விடுத்துள்ள கருத்து

Published By: Vishnu

03 May, 2020 | 07:08 PM
image

(எம்.மனோசித்ரா)

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வித்துறை சார் அதிகாரிகளால் தீர்மானிக்க முடியாது. இதற்கு சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளை பெற்று அதற்கேற்ப தீர்மானங்களை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

வடமத்திய மாகாண பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து மாகாண ஆளுனர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன் போது வடமத்திய மாகாண பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என்று ஆளுனர் தெரிவித்திருக்கிறார்.

அதற்கமைய சில ஆலோசனைகளுடன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் 100 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான பொறுப்பு ஆசிரியர்களிடத்திலும் பாடசாலை அபிவிருத்தி குழுவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

பாடசாலைகளை ஆரம்பிக்கலாம் எனக் கூறப்படும் வடமத்திய மாகாணத்திலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டுள்ளனர். சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது அச்சுறுத்தலானது.

பாடசாலைகள் வரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்புமாகும். ஆனால் இது தொடர்பில் தீர்மானிக்க வேண்டியது கல்வித்துறை சார் அதிகாரிகள் அல்ல. சுகாதாரத்துறையினருடன் கலந்தாலோசித்து அதற்கமையவே பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

ஏப்ரல் 28 ஆம் திகதி வடமத்திய மாகாண ஆளுனர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கல்வி அமைச்சர் செயலாளர் , மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்குபற்றியுள்ளனர். ஆனால் அவர்களால் இந்த தீர்மானத்தை எடுக்க முடியாது.

எனவே பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளைப் பெறுமாறு நாம் வலியுறுத்துகின்றோம். அவ்வாறு சுகாதார ஆலோசனைகள் இன்றி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுதல் அச்சுறுத்தலானது என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33