(எம்.மனோசித்ரா)
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வித்துறை சார் அதிகாரிகளால் தீர்மானிக்க முடியாது. இதற்கு சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளை பெற்று அதற்கேற்ப தீர்மானங்களை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
வடமத்திய மாகாண பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து மாகாண ஆளுனர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன் போது வடமத்திய மாகாண பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என்று ஆளுனர் தெரிவித்திருக்கிறார்.
அதற்கமைய சில ஆலோசனைகளுடன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் 100 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான பொறுப்பு ஆசிரியர்களிடத்திலும் பாடசாலை அபிவிருத்தி குழுவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
பாடசாலைகளை ஆரம்பிக்கலாம் எனக் கூறப்படும் வடமத்திய மாகாணத்திலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டுள்ளனர். சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது அச்சுறுத்தலானது.
பாடசாலைகள் வரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்புமாகும். ஆனால் இது தொடர்பில் தீர்மானிக்க வேண்டியது கல்வித்துறை சார் அதிகாரிகள் அல்ல. சுகாதாரத்துறையினருடன் கலந்தாலோசித்து அதற்கமையவே பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.
ஏப்ரல் 28 ஆம் திகதி வடமத்திய மாகாண ஆளுனர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கல்வி அமைச்சர் செயலாளர் , மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்குபற்றியுள்ளனர். ஆனால் அவர்களால் இந்த தீர்மானத்தை எடுக்க முடியாது.
எனவே பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளைப் பெறுமாறு நாம் வலியுறுத்துகின்றோம். அவ்வாறு சுகாதார ஆலோசனைகள் இன்றி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுதல் அச்சுறுத்தலானது என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM