(எம்.எப்.எம்.பஸீர்)
முல்லைதீவில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரு வயோதிபர்கள் உயிரிழந்திருந்த நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா இல்லை என முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது உறுதியாகியுள்ளது.
இந் நிலையில் மற்றையவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் இன்று இரவு 7.00 மணி வரை கிடைக்கப் பெற்றிராத நிலையில், அவரது பி.சி.ஆர். முடிவும் கிடைக்கப்பெற்ற பின்னர் பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டு மரணத்துக்கான காரணம் வெளிப்படுத்தப்படும் என விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க விரகேசரிக்கு தெரிவித்தார்.
அண்மையில் புறக்கோட்டை - குணசிங்கபுர பகுதியில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட யாசகர்கள் உள்ளிட்ட குழுவில் உள்ளடங்கிய இருவரே நேற்று உயிரிழந்திருந்தனர். நேற்று காலை ஒருவரும் மாலை ஒருவரும் உயிரிழந்ததாகவும், அவர்களின் சடலங்கள் மேலதிக பி.சி.ஆர். மற்றும் பிரேத பரிசோதனைகள் தொடர்பில் முள்ளியவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்திருந்தார்.
இவர்களில் காலை நேரத்தில் உயிரிழந்த நபரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் மட்டுமே இச்செய்தி எழுதப்படும் போதும் கிடைக்கப் பெற்றிருந்தது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதிக்கும் 18 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், முல்லைத்தீவில் விமானப்படை கட்டளை அதிகாரி குறூப் கெப்டன் ஏ.என்.விஜேசிறிவர்தனவின் மேர்பார்வையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு, கொழும்பு புறக்கோட்டை - குணசிங்கபுர பகுதியில் இருந்து ஒன்று சேர்க்கப்பட்ட மக்கள் அழைத்து செல்லப்பட்டனர். யாசகர்கள், கூலித் தொழிலாளிகள் மற்றும் ஆதரவற்ற முதியவர்களென பலரும் அதில் உள்ளடங்கியிருந்தனர். அவர்கள் அங்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM