ஊரடங்கை மீறிய 44 ஆயிரத்து 231 பேர் கைது :11 ஆயிரத்து 460 வாகனங்கள் பறிமுதல்

Published By: Digital Desk 3

02 May, 2020 | 06:19 PM
image

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக  அமுல்படுத்தப்பட்ட  ஊரடங்குச்  சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக  இதுவரையில்  44 ஆயிரத்து 231 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 11 ஆயிரத்து  460  வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

வைரஸ் தொற்றினால் ஏற்படும் நெருக்கடிநிலைமையை கருத்திற்கொண்டு , கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நாடுபூராகவும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதன்போது இடர்வலையங்களைத் தவிர ஏனையப்பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போதும் நாடுபூராக ஊரடங்கு அமுலில் இருப்பதுடன் , இடர்வலையங்களைத் தவிர ஏனையப்பகுதிகளுக்கான ஊரடங்கு திங்கட்கிழமை தளர்த்தப்பட்டு  எதிர்வரும் புதன்கிழமை ஆறாம் திகதி மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில்  இன்று சனிக்கிழமை காலை ஆறு மணி முதல் பிற்பகல் 12 மணிவரையான வரையிலான  6 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் 204  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 78  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு 44 நாட்கள் கடந்துள்ள நிலையில்  காலப்பகுதியில்  அதற்கு புறம்பாக செயற்பட்டதாக  இதுவரையில் 44 ஆயிரத்து 231 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 11 ஆயிரத்து 460  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43