(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 44 ஆயிரத்து 231 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 11 ஆயிரத்து 460 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
வைரஸ் தொற்றினால் ஏற்படும் நெருக்கடிநிலைமையை கருத்திற்கொண்டு , கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நாடுபூராகவும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதன்போது இடர்வலையங்களைத் தவிர ஏனையப்பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போதும் நாடுபூராக ஊரடங்கு அமுலில் இருப்பதுடன் , இடர்வலையங்களைத் தவிர ஏனையப்பகுதிகளுக்கான ஊரடங்கு திங்கட்கிழமை தளர்த்தப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை ஆறாம் திகதி மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் இன்று சனிக்கிழமை காலை ஆறு மணி முதல் பிற்பகல் 12 மணிவரையான வரையிலான 6 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் 204 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 78 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு 44 நாட்கள் கடந்துள்ள நிலையில் காலப்பகுதியில் அதற்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 44 ஆயிரத்து 231 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 11 ஆயிரத்து 460 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM