நான் அரசியல் ரீதியாக  பழிவாங்கப்படுகிறேன் : கோத்தபாய   கவலை 

Published By: MD.Lucias

08 Dec, 2015 | 09:02 AM
image

அரசியல் ரீதியாக தான் பழிவாங்கப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ விசனம் வெளியிட்டுள்ளார். மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான விசாரணைகள் தமக்கு பெரும் தொந்தரவாக அமைந்துள்ளது எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது 

ஒரே சம்பவம் தொடர்பில் பல தரப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனால் பல்வேறு தரப்பினரின் விசாரணைகளுக்கும் ஆஜராக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.  

பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு, பொலிஸ்  நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவு ஆகியன ஒரே சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றன.  

இவ்வாறான விசாரணைகளை அரசியல் ரீதியான துன்புறுத்தலாகவே கருதப்பட வேண்டும். ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக மட்டும் பத்து தடவைகள்   கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள விசாரணைக்குழு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளேன்.  

ஓர் சம்பவம் தொடர்பில் ஓரு நிறுவனத்தினால் விசாரணை நடத்தப்படுவதே ஏற்றுக்கொள்ளக் கூடிய நியதியாகும்.   , எனினும் எனக்கு எதிராக பல்வேறு தரப்பினர் ஒரே விடயம் குறித்து பல தடவை விசாரணை நடத்தி அரசியல் ரீதியாக பழிவாங்கிவருகின்றனர்.  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33