(எம்.மனோசித்ரா)
மூடப்பட்டுள்ள பாடசாலைகள், அறநெறி பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்திலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு இது தொடர்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக இது வரையில் மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகள், அறநெறி பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்தையும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பத்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறார்.
பாடசாலை மற்றும் ஏனைய கல்வி ஸ்தானங்களையும் மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கல்வி ஸ்தாபனங்களின் அதிகாரிகள் மற்றும் சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி பாடசாலை அபிவிருத்தி குழு இ பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மாகாண மற்றும் வலய கல்வி பணிமனைகள் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
அனைத்து வகையான சுத்தப்படுத்தல் நடவடிக்கைகளும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM