ஐரோப்பிய ஒன்றியத்தால் நடாத்தப்படும் சிறுவர்களுக்கான சித்திரப்போட்டி

Published By: Digital Desk 3

01 May, 2020 | 07:31 PM
image

(நா.தனுஜா)

வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதைத் தொனிப்பொருளாகக் கொண்ட சித்திரப்போட்டியில் கலந்துகொள்ளுமாறு சிறார்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்புவிடுத்திருக்கிறது.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஒட்டுமொத்த நாடும் முடக்கப்பட்டுஇ மக்கள் தத்தமது வீடுகளுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிலையேற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதைத் தொனிப்பொருளாகக் கொண்டு 15 வயது மற்றும் அதற்குக் குறைந்த வயதுடைய சிறார்கள் தமது சித்திரங்களை அனுப்பிவைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது.

இந்த சித்திரப்போட்டிக்கான அழைப்பு இலங்கை மற்றும் மாலைதீவைச் சேர்ந்த இளம் சித்திரக் கலைஞர்களுக்கு விடுக்கப்பட்டிருப்பதுடன் இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தமது சித்திரத்தைப் புகைப்படம் பிடித்து, பெயர்இ வயது மற்றும் தொடர்புகொள்ளக்கூடிய விபரங்களுடன் euinsrilanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கலாம். (சித்திரம் உயர்ந்தபட்சம் 25 MB அளவில் மாத்திரமே இருக்கவேண்டும்).

சித்திரப்போட்டியின் வெற்றியாளர்கள் 6 வயது வரையானோர் 7 - 11 வயது வரையானோர் 12 - 15 வயது வரையானோர் என்ற வயது அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவர். வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29