(நா.தனுஜா)
வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதைத் தொனிப்பொருளாகக் கொண்ட சித்திரப்போட்டியில் கலந்துகொள்ளுமாறு சிறார்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்புவிடுத்திருக்கிறது.
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஒட்டுமொத்த நாடும் முடக்கப்பட்டுஇ மக்கள் தத்தமது வீடுகளுக்குள்ளேயே இருக்கவேண்டிய நிலையேற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதைத் தொனிப்பொருளாகக் கொண்டு 15 வயது மற்றும் அதற்குக் குறைந்த வயதுடைய சிறார்கள் தமது சித்திரங்களை அனுப்பிவைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது.
இந்த சித்திரப்போட்டிக்கான அழைப்பு இலங்கை மற்றும் மாலைதீவைச் சேர்ந்த இளம் சித்திரக் கலைஞர்களுக்கு விடுக்கப்பட்டிருப்பதுடன் இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தமது சித்திரத்தைப் புகைப்படம் பிடித்து, பெயர்இ வயது மற்றும் தொடர்புகொள்ளக்கூடிய விபரங்களுடன் euinsrilanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கலாம். (சித்திரம் உயர்ந்தபட்சம் 25 MB அளவில் மாத்திரமே இருக்கவேண்டும்).
சித்திரப்போட்டியின் வெற்றியாளர்கள் 6 வயது வரையானோர் 7 - 11 வயது வரையானோர் 12 - 15 வயது வரையானோர் என்ற வயது அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவர். வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM